New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/14/HkhidcliSBbpnILqm1SV.jpg)
ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம்
ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம்
எல்லோருக்கும் பிடித்த ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் கொடுக்கும் பிரசாதத்தை இனி வீட்டிலேயே செய்யலாம். மிகவும் சுவையாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று தமிழன் சேனலில் கூறியிருப்பதாவது,
இந்த ஸ்ரீரங்கம் கோயில் சம்பார தோசை பிரசாதம் வருடத்தில் 20 நாள் மட்டுமே கிடைக்கும். ஆனால் இதை எப்போது வேண்டுமானாலும் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
வருடத்தில் 20 நாட்கள் மட்டுமே கிடைக்கும் அதுவும் நவதானியங்களை வைத்து செய்யக்கூடிய சம்பாரா தோசை வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை
மொச்சைக்கொட்டை
கொள்ளு
எள்
கருப்பு உளுந்து
கொண்டை கடலை
பாசிப்பருப்பு
துவரம் பருப்பு
பச்சரிசி
எண்ணெய்
உப்பு
மிளகு
சீரகம்
சுக்கு பொடி
செய்முறை
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கழுவி ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் இவற்றை கொரகொரப்பாக அரைத்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும்.
மாவு புளித்த பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனை தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி இடித்த மிளகு, சீரகம் சுக்கு பொடி சேர்த்து கொள்ளவும். பின்னர் இதனை கலந்து விட வேண்டும்.
திருவரங்கம் -ல் மட்டுமே கிடைக்கும் சம்பார தோசை
இதை அனைத்தையும் நன்றாக கலந்து விட்ட பிறகு தோசை கல்லில் ஆப்பம் மாதிரி திக்காக ஊற்றி இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கலாம். இந்த தோசைக்கு தொட்டு சாப்பிட்ட எலுமிச்சை ஊறுகாய் தான் கொடுப்பார்கள். நீங்களும் வீட்டில் எலுமிச்சை ஊறுகாய் வைத்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.