குறிப்பாக நாம் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீதான் குடிபோம் ஆனால் இதற்கு பதிலாக நாம் குங்குமப் பூ தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
அப்படி என்ன குங்குமப் பூவில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நம்மை வியக்க வைக்கும் பண்புகளை குங்குமப் பூ கொண்டுள்ளது.
சருமப் பொலிவு: நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. ஒருவித பொலிவை அது தருகிறது.
கூந்தல் : கூந்தல் உதிர்வதை தடுக்கும் மேலும் கூந்தலின் தன்மையை கூடுதல் அழகாக்கும்.
மாதவிடாய்: குறிப்பாக குறைந்த நாள் மற்றும் அதிக வலி நிறைந்திந்த மாதவிடாய் நேரங்களில் இதை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவரிடம் அனுமதி வாங்கிய பிறகு சாப்பிடுவது நல்லது
செய்முறை
குங்குமப் பூ
பட்டை பொடி
ஏலக்காய்
பாதாம்
தேன்
செய்முறை :
தண்ணீரில் குங்குமப் பூ, பட்டை பொடி, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மிதமான தீயில் வைக்க வேண்டும். தொடர்ந்து அதை வடிகட்ட வேண்டும். நன்றாக சூடு தனிந்ததும் அதில் பாதாம் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம் .