சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, சரியான தேர்வாக இருப்பது ராகிதான் நாம் ராகியில் உப்புமா மட்டுமே செய்வோம். ஆனால் இந்த ரசிபியானது ராகியை வைத்து இட்லி எப்படி செய்வது என்பதை விளக்குகிறது.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகியை எடுத்துகொள்ளுங்கள். 2 முதல் 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்ட பிறகு அதை தனியாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள் . தற்போது அதில் தயிர், நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சேர்க்க வேண்டும். இதில் தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை 20 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்.
தற்போது வழக்கம்போல், இட்லி தட்டில் எண்ணெய் ஊற்றி முழுவதும் பரப்பி அதில் மாவை ஊற்றி வேக வைக்கவும். சுவையான ராகி இட்லி ரெடி