/indian-express-tamil/media/media_files/2025/04/20/UcFSdxEsKkPVN2NtxVF5.jpg)
மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போதே வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. தற்போது அடிக்கும் வெயில் மே மாதம் நெருங்கும் முன்பே உக்கிரமாக இருக்கிறது.
இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் முறையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது அவசியம். தவிர, இயற்கையான இளநீர், சர்பத் போன்ற பானங்களையும் பருகி வரலாம்.
அந்த வகையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இருந்து பானம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார் சித்த மருத்துவர் சிவராமன். இது தொடர்பாக ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் அவர் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
வெயில் காலத்தில் உடலை குளிர்விக்க பானை தண்ணீர், மோர், இளநீர், பதநீர், மாதுளை, வெள்ளை பூசணி ஜூஸ் ஆகியவற்றை எடுத்து கொள்ளலாம் என்றும் கடைகளில் விற்கும் பாட்டில் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
வெயில் காலத்தில் மோர் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும். இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்தும் குடிக்கலாம். இதில் மாங்காயை சேர்த்து ஜூஸ் போட்டு குடிக்கவும். இது உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும்.
உடலை நீரேற்றமாக வைக்கும் பானங்கள்:
பானை தண்ணீர்
மோர்
இளநீர்
பதநீர்
மாதுளை
வெள்ளை பூசணி ஜூஸ்
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.