சுட்டெரிக்கும் வெயில்... வீட்டிலேயே குளு குளு டிரிங்க்; ராகி வச்சு இப்படி செய்து அசத்துங்க!
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வீட்டிலேயே குளு குளு டிரிங்க் ஒன்றை ராகியை வைத்து இப்படி செய்து பாருங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். வெயிலுக்கு குளு குளுனு இருக்கும்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வீட்டிலேயே குளு குளு டிரிங்க் ஒன்றை ராகியை வைத்து இப்படி செய்து பாருங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். வெயிலுக்கு குளு குளுனு இருக்கும்.
இந்த சம்மர் ராகி டிரிங்க்கை இந்தியன் ரெசிபிஸ் தமிழ் என்ற யூடியூப் சேனலில் அபி செய்து காட்டியுள்ளார். கேழ்வரகு மாவில் இந்த சம்மர் டிரிங்க் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வீட்டிலேயே குளு குளு டிரிங்க் ஒன்றை ராகியை வைத்து இப்படி செய்து பாருங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி குடிப்பார்கள். வெயிலுக்கு குளு குளுனு இருக்கும்.
Advertisment
இந்த சம்மர் ராகி டிரிங்க்கை இந்தியன் ரெசிபிஸ் தமிழ் என்ற யூடியூப் சேனலில் அபி என்பவர் செய்து காட்டியுள்ளார். கேழ்வரகு மாவில் இந்த சம்மர் டிரிங்க் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.
ராகி டிரிங்க் செய்முறை:
முதலில் ஒரு சாஸ் பான் எடுத்துக்கொள்ளுங்கள். கால் கப் அளவு கேழ்வரகு மாவு போடுங்கள். அதில் 2 கப் அளவு தண்ணீர் ஊற்றுங்கள். நன்றாகக் கலக்குங்கள். கொஞ்சம்கூட கட்டிகள் இருக்கக்கூடாது. நன்றாகக் கலக்கி கலந்துவிட்ட பிறகு, ஸ்டவ்வைப் பற்றவைத்து, இதை எடுத்து வைத்து கலக்கி விட்டுக்கொண்டே இருங்கள், திக்கான பதம் வரும்போது, ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். பின்னர் இதை எடுத்து வைத்துவிடுங்கள். ஆறிய பிறகு, இன்னும் திக்காகி இருக்கும்.
Advertisment
Advertisements
அடுத்து, 10 பாதாம் பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொதிக்கிற தண்ணியை ஊற்றி 2 மணி நேரம் ஊறவையுங்கள்.
அதே போல, 2 டேபிள்ஸ்பூன் அளவு சப்ஜா விதை எடுத்துகொள்ளுங்கள், அதில் குளிர்ந்த நீரை ஊற்றி, உப்பி வரும் வரை ஊற வையுங்கள்.
அதே போல, 10-12 பேரிச்சம்பழம் எடுத்து கொட்டை நீக்கிவிட்டு, சுடு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வையுங்கள்.
2 மணி நேரம் கழித்துப் பார்த்தால், பாதாம், பேரீச்சம்பழம், சப்ஜா விதைகள் நன்றாக ஊறியிருக்கும். பாதாம் விதைகளை தோல் உரித்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, 1 கிலோ பீட்ரூட் எடுத்து தொல் சீவிவிட்டு, பொடியாகக் கட் பண்ணி மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸ் செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது தோல் உரித்து வைத்துள்ள பாதாம் பருப்பு எடுத்து ஒரு பெரிய மிக்சி ஜாரில் போடுங்கள், அதனுடன் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை தண்ணீருடன் ஊற்றுங்கள். பீட்ரூட் ஜூஸ் ஊற்றுங்கள், ஏற்கெனவே, காய்ச்சி ஆற வைத்த ராகி கூழு போடுங்கள், 3 கப் அளவு காய்ச்சி ஆற வைத்து, 2 மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்த பால் ஊற்றுங்கள், உங்களுக்கு தேவையான அளவு இனிப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அரைத்துக்கொள்ளுங்கள். அதில், ஏற்கெனவே ஊற வைத்த சப்ஜா விதைகளை போட்டு கலக்குங்கள், இப்போது சம்மர் ராகி டிரிங்க் தயார், கிளாசில் ஊற்றி பரிமாறுங்கள், சுவையாகவும் குளுகுளுன்னும் இருக்கும்.