கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அதனால இந்த வெயில்ல பயன்படுத்தி யூஸ்ஃபுல்லா ஒரு ரெசிபி எப்படி செய்வது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம். கோடை வெயில் ஸ்டார்ட் ஆகிவிட்டது பிள்ளைகளுக்கும் பள்ளி விடுமுறை விட்டாச்சு இந்த நேரத்துல அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சாப்பிடுறதுக்கு வடகம் எப்படி செய்யறதுன்னு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
ரவை – 1 கப் (200 கிராம்) ஜவ்வரிசி – 50 கிராம் தண்ணீர் – 2½ லிட்டர் உப்பு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் வெள்ளை எள் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 5 மல்லி இலை – 1 கைப்பிடி
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் ரவை, ஜவ்வரிசி ஆகியவற்றை சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு குக்கரில் தண்ணீர், சீரகம், எள்ளு, அரைத்த காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சூடாக்கவும்.
பின்னர் இந்த மாவில் தண்ணீர் சிறிது சேர்த்து கரைத்துக் கொள்ளவும். கரைத்த மாவை குக்கரில் இருக்கும் தண்ணீரோடு சேர்த்து கொத்தமல்லி தலைகளையும் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதை ஒரு வெள்ளை வேஷ்டி அல்லது ஏதாவது ஒரு துணியிலோ சிறிது சிறிதாக ஊற்றி வெயிலில் காய வைத்து எடுத்தால் சுவையான வடகம் தயாராகிவிடும்.
இப்போது இதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மதிய நேர சாப்பாட்டுக்கு அல்லது ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக கூட சாப்பிடலாம்.