/indian-express-tamil/media/media_files/2025/06/15/FEtl2HmVuYLodYN3THyl.jpg)
சுண்டைக்காயில் செய்த வடை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், அவ்வளவு அருமையான சுவையுடன் இருக்கும். இந்தச் சிறப்பான ரெசிபி வேறு எங்கும், செய்து பார்த்து இருப்பீர்களா? அதனை எப்படி செய்வது என்று சாய்மணிவிவேக் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இந்தச் சுவையான மசாலா வடையை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் - 2 கை அளவு
கடலைப்பருப்பு - 1/4 கிலோ
இஞ்சி
பூண்டு
சோம்பு - 1/4 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில், இரண்டு கை அளவு சுண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள். சுத்தப்படுத்திய சுண்டைக்காயை ஒரு உரலில் போட்டு, இடித்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, இடித்த சுண்டைக்காயைச் சேர்த்து 7 நிமிடங்கள் மட்டும் வதக்குங்கள்.
வதக்கிய சுண்டைக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து, நன்கு அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 1/4 கிலோ கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளுங்கள். ஊறிய கடலைப்பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் சோம்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில், ஊறவைத்த கடலைப்பருப்பில் இருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அரைத்த வடை மாவுடன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மற்றும் அரைத்த சுண்டைக்காய் விழுது ஆகியவற்றைச் சேர்க்கவும்.
சுவைக்குத் தேவையான அளவு உப்பு சேர்த்து, அனைத்தையும் நன்கு கலந்து விடவும்.
மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால், மொறுமொறுப்பான சுண்டைக்காய் மசாலா வடை தயார். இந்த சுண்டைக்காய் மசாலா வடையை தேநீருடன் பரிமாறாமல், பாயாசத்துடன் பரிமாறிப் பாருங்கள், சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.