/tamil-ie/media/media_files/uploads/2022/10/New-Project15.jpg)
உணவு என்றாலே எல்லோரும் மிகவும் பிடிக்கும். விதவிதமான உணவுகளை ருசிக்க வேண்டும் என பலரும் விரும்புவர். ஒவ்வொரு ஊருக்கும் தனிச்சிறப்பு உண்டு. உடை, பேச்சு, உணவு, கலாச்சாரம் என பன்முகத் தன்மை உண்டு. அந்தவகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமத்து உணவுகள் பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. வித்தியாசமான உணவுகள், ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்தனர். அந்தவகையில் கிராமத்து ஸ்டைல் சுட்ட கத்தரிக்காய் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம். சுடு சோறுடன் சுட்ட கத்தரிக்காய் குழம்பு சாப்பிட்டால் அவ்வளவு சுவையான இருக்கும்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 6
காய்ந்த மிளகாய் - 10
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - சிறிதளவு
வெல்லம் - சிறு துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் கத்தரிக்காய் அடுப்பில் வைத்து சுடவேண்டும். முழுமையாக சுடவேண்டும். அதனால், சொத்தை , பூச்சி இல்லாமல் இருக்கும் கத்தரிக்காயை பார்த்து வாங்கி கொள்ளுங்கள். கத்தரிக்காயில் குச்சி சொருகி ஸ்டவ் அடுப்பில் வாட்டி எடுக்க வேண்டும். தோல் நன்றாக கருகும் வரை சுட வேண்டும். அடுத்து, கத்தரிக்காய் மற்றும் காய்ந்த மிளகாய்களை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
இப்போது கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது அரைத்த கத்தரிக்காய் விழுது சேர்த்து புளி கரைத்து ஊற்ற வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும். சிறிது துண்டு வெல்லம் சேர்த்து இறக்கலாம். அவ்வளவுதான் சுட்ட கத்தரிக்காய் குழம்பு தயார். சுடு சோறுடன் சேர்த்து சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.