/indian-express-tamil/media/media_files/2025/02/17/QBYyRb3xSxqJZWzQWXXG.jpg)
இன்றைய காலக்கட்த்தில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் சாதாரனமாக அசைவம் சாப்பிடும் நிலை வந்துவிட்டது. இதில் குறிப்பாக பலரும் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவுகளில் சிக்கல் முதலிடத்தில் உள்ளது. பிராய்லர் சிக்கன் வைத்து, பலவகையான உணவுகளை தயார் செய்து வருகின்றனர். ஆனால் இந்த பிராய்லர் சிக்கன் உடலுக்கு கேடு என்ற தகவலும் இணையத்தில் பரவி வருகிறது.
இது குறித்து டாக்டர், சந்தோஷ் ஜேக்கப் விளக்கம் அளித்துள்ளார்.இது தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள அவர், காலையில், இட்லி தோசை, மதியம் சாதம் சாம்பார், தால், தயிர், பொறியல், சப்பாத்தி, இரவில் 2 தோசை சட்னி தான் சாப்பிடுகிறார்கள். இதில் புரோட்டீனே கிடையாது. நமது உணவில் புரோட்டின் எடுக்கவில்லை என்றால் எலும்புகள் தான் கொடுக்கும். 40 வயது வரை இதை சமாளித்து விடலாம்.
40-வயதுக்கு மேல், புரோட்டின் குறைபாடு காரணமாக வலி இல்லாத யாரையும் பார்க்க முடியாது. இந்தியாவில் புரோட்டின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. உடலில் காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்டு காலியாக உள்ள இடம் நிரம்ப புரோட்டின் மிக அவசியம். இந்த புரோட்டின் குறைபாட்டை தீர்க்க, பிராய்லர் சிக்கனை நன்றாக சமைத்து சாப்பிடலாம். பிராய்லர் சிக்கன் தோலில் கொழுப்பு அதிகம் என்பதால், அதை சாப்பிட கூடாது. மற்றபடி, ஒரு வாரத்தில் 4 பீஸ் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால், ஹார்மோன் மாற்றி பிரச்னை வருமா என்பதை யோசிக்க வேண்டும்.
அதேபோல் இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் துரித உணவுகளை திகம் சாப்பிடுகிறார்கள். மேலும் போனை பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால், அவர்களுக்கு, மென்டல் ஹெல்த் பிரச்னை ஏற்படுகிறது. இந்த மாதிரி கொழுப்பு உணவுகள் உடலில் அதிகமான சிறுவயதில் இருந்தே சாப்பிட்டு வந்தால், ஹார்மோன் அளவு அதிகமாக பிரச்னைகள் உருவாகலாம். ஆனால் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் தான் இந்த பிரச்னைகள் வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று, டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.