செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில், சப்பாத்தி மற்றும் தோசைக்கு ஏற்ற வகையில், பன்னீர் கலாம் ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தனியா ஒரு டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
Advertisment
Advertisements
சீரகம் – அரை ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
கடுகு ஒரு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
தனியா தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மஷ்ரூம் – 400 கிராம்
பன்னீர் – 100 கிராம்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாய் அடுப்பில் வைத்து அதில், தனியா, மிளகு, சீரகம், சோம்பு இவை 4 பொருட்களையும் சேர்த்து வறுக்கவும். நன்றாக வறுபட்டவுடன், மிக்ஸியில் அரைத்து பவுடராக எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, அதனுடன் நறுக்கிய பூண்டை சேர்க்கவும். அடுத்து நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பிறகு இதில் வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து தண்ணீர் விட்டு 5-6 முதல் வேக வைக்கவும்.
கலவை நன்றாக கொதித்தவுடன், அதில் சுத்தகப்படுத்தி வைத்துள்ள மஷ்ரூமை சேர்க்கவும். இதன்பிறகு 5 நிமிடங்கள் மஷ்ரூமை வேக வைக்கவும். 5 நிமிடம் ஆனவுடன், அதில், அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்க்கவும்.
மசாலா பொடி சேர்த்து மிக்ஸ் ஆனவுடன், அதில் கட் செய்த பன்னீரை சேர்த்து கிண்டிவிடவும். இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான பன்னீர் கலான் ரோஸ்ட் ரெடி.