/indian-express-tamil/media/media_files/2025/08/15/aval-kesari-2025-08-15-23-54-46.jpg)
கிருஷ்ண ஜெயந்தியை அவல் கேசரியுடன் கொண்டாடுங்கள்! சுவையான இந்த இனிப்பு வகையை எளிமையான முறையில், குறைந்த நேரத்தில் எப்படி செய்வது என பார்க்கலாம். இந்த செய்முறையை குறித்து வைத்து கொள்ளுங்கள். கிருஷ்ண ஜெயந்திக்கு இதை செய்து உங்கள் பண்டிகையை மேலும் சிறப்பாக கொண்டாடுங்கள்.
தேவையான பொருட்கள்:
அவல்
தண்ணீர்
பால்
குங்குமப்பூ
ஏலக்காய்
உப்பு (ஒரு சிட்டிகை)
முந்திரி
திராட்சை
நெய்
செய்முறை:
முதலில், அவலை நன்கு பொடி செய்து வைத்துக்கொள்ளவும். எந்தக் கப்பில் அவல் எடுத்தீர்களோ, அதே கப்பில் இரண்டு கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்துக்கொள்ளவும். அதோடு, குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இந்த கலவையில் பொடி செய்த அவலைச் சேர்த்து, கட்டிகள் சேராதவாறு கைவிடாமல் நன்கு கலக்கவும். கேசரி கெட்டியாகி வரும்போது, இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய்த்தூள், பிஸ்தா, வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்கு கலக்கினால், சுவையான அவல் கேசரி தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.