/indian-express-tamil/media/media_files/2025/06/28/pulav-2025-06-28-18-38-56.jpg)
தினமும் மதிய உணவு என்ன பேக் செய்வது என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம், உங்களுக்கான இன்று பீட்ரூட் புலாவ் செய்யப் எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம். இது மிகவும் சுவையாக இருக்கும். இதைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதை மிக எளிதாகவும், விரைவாகவும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்
நெய்
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
பிரியாணி இலை
வெங்காயம்
பீட்ரூட்
பாசுமதி அரிசி
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும், இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து, ஒரு கைப்பிடி புதினா இலைகளைச் சேர்த்து கலந்து, ஒரு தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டேபிள்ஸ்பூன் கல் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் அரை டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பெரிய பீட்ரூட்டை துருவிச் சேர்த்து, கலவையை நன்கு கலந்து விடவும். பீட்ரூட்டின் பச்சை வாசனை நீங்கியதும், இரண்டு டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஒரு கப் பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊறவைத்திருந்தால், அதை அப்படியே சேர்த்துக் கொள்ளவும். மேலே கொத்தமல்லி இலைகளைத் தூவி, பிரஷர் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை சமைத்து எடுக்கவும். அவ்வளவுதான், நம்முடைய சுவையான பீட்ரூட் புலாவ் சூப்பராக தயார். இது மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.