/indian-express-tamil/media/media_files/2025/03/23/vJW76QWtlBl4YHIgFqHh.jpg)
தென்னிந்தியாவின் பிரபலமான ஒரு உணவு நாட்டுக்கோழி குழம்பு. இது காரசாரமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்தக் குழம்பை எப்படி சுலபமாகச் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மசாலா அரைப்பதற்கு:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
மல்லி விதைகள் - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
முந்திரி - 8
காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - 10 இலைகள்
இஞ்சி, பூண்டு
பெரிய வெங்காயம் - 2
குழம்பு செய்வதற்கு:
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - 2
அன்னாசி பூ - 1
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
நாட்டுக்கோழி - 1 கிலோ
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
குழம்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
அரைத்த மசாலா விழுது - 1 கப்
தண்ணீர் - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
கறிவேப்பிலை - 10 இலைகள்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, முந்திரி, காஷ்மீரி மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். வதக்கிய மசாலாவை ஆற வைத்து, மிக்ஸியில் நைஸான விழுதாக அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில், எண்ணெய் ஊற்றி, பட்டை மற்றும் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும். பிறகு, நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு மசிய வதக்கவும். இதன் பிறகு, சுத்தம் செய்த நாட்டுக்கோழி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். கோழி சற்று வதங்கியதும், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். கோழி நன்கு வெந்த பிறகு, தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது சுவையான நாட்டுக்கோழி குழம்பு தயார். இதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் பரிமாறலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.