செஃப் தீனா ஸ்டைலில் கார பூண்டு சட்னி செய்பது எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
புளி - 75 கிராம்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 200 கிராம்
Advertisment
Advertisements
உருண்டை பருப்பு - 400 கிராம்
பூண்டு - 1 கிலோ
இஞ்சி - 75 கிராம்
பெருங்காயப் பொடி - 30 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
கடுகு - 50 கிராம்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
நெல்லெண்ணெய் – 150 எம்.எல்.
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில், புளியை சேர்க்கவும். அதன்பிறகு வரமிளகாய் அதில் சேர்த்து தாளிக்கவும். அடுத்து அதில் உளுத்தம்பருப்பை சேர்க்கவும். இந்த கலவை நன்றாக வதங்கியதும், அதில் பூண்டை சேர்க்கவும்.
அடுத்து இந்த கலவையில் இஞ்சி சேர்த்த வதக்கவும். அதன்பிறகு பெருங்காயப்பொ, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வேகவைக்கவும். இதில் பூண்டு நன்றாக வெந்தவுடன், இதனை கிரைண்டரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில், கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த பூண்டு பேஸ்டை அதில் சேர்த்து கிண்டவும். சிறிது நேரம் கழித்து இறக்கினால் சுவையான பூண்டு சட்னி ரெடி.