New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/7YVcN9mWLUMn5a7nwraF.jpg)
வித்தியாசமான சாம்பார் சாதம் கர்நாடக ஸ்லைில் காய்கறி இல்லாமல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
அலுவலகங்கள் செல்லும் நபர்கள், மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் என பலரும் மதிய உணவு எடுத்து செல்வார்கள். இப்படி இருப்பவர்களுக்கு தினகமும் ஒரே மாதிரியாக உணவை கொடுத்தால் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். அதனால் தினமும் வித்தியாகமான உணவை கொடுக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதே இல்லத்தரசிகளிக் முக்கிய யோசனையாக உள்ளது. அந்த வரிசையில் வித்தியாசமான சாம்பார் சாதம் கர்நாடக ஸ்லைில் காய்கறி இல்லாமல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
அரிசி ஒரு டம்பளர்
துவரம்பருப்பு – அரை டம்பளர்
தக்காளி – 2
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொத்தமல்லி – தலா ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
தேங்காய் – 15 துண்டு
காய்ந்த மிளகாய் – 2
மிளகாய் தூள், தனியா தூள் தலா – ஒரு டீஸ்பூன்
முந்திரி – 10
புளி நெல்லிக்காய் அளவு
வெல்லம் ஒரு துண்டு
செய்முறை:
முதலில் அரிசி, பருப்பு தக்காளி 1, வெங்காயம் 1, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் உப்பு சேர்த்மது குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, சீரகம் மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொத்தமல்லி, வெந்தயத்தை நன்றாக வறுத்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதேபோல், தேங்காய் காய்ந்த மிளகாய் இரண்டையும் எண்ணெயில் சேர்த்து வருத்து இதனுடன் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், முந்திரி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், தனியா தூள் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
குழம்பு கொதித்தவுடன், சாத்தில் மிக்ஸ் செய்து, புளி கரைசல், அரைத்து வைத்துள்ள பொடி அனைத்தும் சேர்த்து கிளரவும். இறுதியாக ஒரு ஸ்பூன் நெய், கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பிஸிபிலா பாத் ரெடி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.