புசு புசு இட்லி... உளுந்து அரைக்கும் முன் இத மட்டும் செய்யுங்க!

இட்லி சாஃப்டா வருவதற்கு, மாவை எப்படி அரைக்க வேண்டும் என்பதை பார்ப்போமா?

இட்லி சாஃப்டா வருவதற்கு, மாவை எப்படி அரைக்க வேண்டும் என்பதை பார்ப்போமா?

author-image
WebDesk
New Update
idly

இட்லி சாஃப்டா வருவதற்கு, மாவை எப்படி அரைக்க வேண்டும் என்பதை பார்ப்போமா?

Advertisment

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 5 பங்கு

முழு உளுந்து - 1 பங்கு

Advertisment
Advertisements

ஜவ்வரிசி - 1/4 பங்கு

கல் உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில், இட்லி அரிசியை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் கல் உப்பைச் சேர்க்கவும். உப்பு சேர்த்து அரிசியைக் கழுவும்போது, அதில் உள்ள அழுக்குகள் எளிதாக வெளியேறும். இதனால் இட்லி வெண்மையாக இருக்கும். அரிசியை நன்கு கழுவிய பின்னர், சுத்தமான தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

அதேபோல், உளுந்தையும் நன்கு கழுவி, சுத்தமான தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கவும். உளுந்து வடைக்கு ஊறவைப்பதுபோல ஒரு மணி நேரம் போதாது, இட்லிக்கு 3 மணி நேரம் ஊறவைப்பது அவசியம். அடுத்து, ஜவ்வரிசியையும் கழுவி, தண்ணீர் ஊற்றி சுமார் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

மாவு அரைக்கத் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு, ஊறிய உளுந்தை மட்டும் எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இது கிரைண்டரில் அரைக்கும்போது மாவு நன்கு பொங்கி வர உதவும். ஊறிய உளுந்து மற்றும் அரிசியை ஊறவைத்த தண்ணீரை வீணாக்காமல் தனியாக எடுத்து வைக்கவும். மாவு அரைக்க இந்தத் தண்ணீர் பயன்படும்.

முதலில், கிரைண்டரில் உளுந்தை மட்டும் போட்டு, சில்லென்ற ஊறவைத்த தண்ணீரைத் தெளித்து, சுமார் 20 நிமிடங்கள் பொங்கப் பொங்க அரைக்கவும். உளுந்து மாவு நன்கு பொங்கி வந்ததும், அதை வழித்தெடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் வைக்கவும்.

இப்போது, அதே கிரைண்டரில் ஊறிய ஜவ்வரிசியை முதலில் போட்டு இரண்டு நிமிடங்கள் அரைக்கவும். பிறகு, ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, மீண்டும் சில்லென்ற ஊறவைத்த தண்ணீரைத் தெளித்து அரைக்கவும்.அரிசி மாவு ரொம்பவும் நைசாகவும் இல்லாமல், ரொம்பவும் கொரகொரப்பாகவும் இல்லாமல், சரியான பதத்தில் இருக்க வேண்டும்.

அரைத்த அரிசி மாவை, ஏற்கனவே எடுத்து வைத்த உளுந்து மாவுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, கைகளால் நன்கு கலக்கவும்.மாவை நன்கு கலந்து வைத்தால், அது எளிதாகப் புளிக்கும். இந்தக் கலவை மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, மாவை மூடி, புளிப்பதற்காக சுமார் 8-10 மணி நேரம் வைக்கவும்.

வெயில் அதிகமாக இருந்தால் விரைவில் புளிக்கும், குளிர்ச்சியான சூழலில் நேரம் அதிகமாகும். மாவு புளித்ததும், அதன் மேற்பரப்பில் சிறிய குமிழ்கள் தோன்றும். இதுதான் சரியான பதம். புளித்த மாவை மீண்டும் ஒருமுறை நன்கு கலந்து, இட்லிப் பாத்திரத்தில் ஊற்றி, மென்மையான, சுவையான இட்லிகளைச் சுடலாம். இந்த செய்முறையைப் பின்பற்றி, நீங்களும் உங்கள் வீட்டில் பஞ்சுபோன்ற இட்லிகளைத் தயாரிக்கலாம்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: