New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/07/UpTM9eX4Icf8EAtEE5EX.jpg)
வித்தியாசமான சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போமா?
அலுவலகங்கள் செல்லும் நபர்கள், மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் என பலரும் மதிய உணவு எடுத்து செல்வார்கள். இப்படி இருப்பவர்களுக்கு தினகமும் ஒரே மாதிரியாக உணவை கொடுத்தால் அவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். அதனால் தினமும் வித்தியாகமான உணவை கொடுக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதே இல்லத்தரசிகளிக் முக்கிய யோசனையாக உள்ளது. அந்த வரிசையில் வித்தியாசமான சாம்பார் மற்றும் உருளைக்கிழங்கு வறுவல் குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 100 கிராம்
பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
பூண்டு – 4
உருளைக்கிழங்கு – 3
மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு
கடுகு, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வரமிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை சிறிதளவு
தக்காளி – 1
லெமன் அளவு புளி
செய்முறை:
முதலில் துவரம்பருப்புடன் பெருங்காயத்தூள், பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
அடுத்து உருளைக்கிழங்கை வட்ட வட்டமாக நறுக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்த கலவையில் தண்ணீர் சேர்க்காமல் உருளைக்கிழங்கை பிரட்டி, வைத்துக்கொள்ளவும்.
அடுத்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கை 5 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
அடுத்து ஒரு வானலில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, தக்காளி, வெங்காயம் சேர்த்து தாளித்து, வேக வைத்த பருப்பை மிசித்து அதனுடன் சேர்க்கவும்.
அதன்பிறகு புளி கரைசலை அதனுடன் சேர்த்து இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பருப்பு சாம்பார் ரெடி. நீங்களும் லஞ்ச் பாக்ஸ்க்கு இதை ட்ரை பண்ணி பாருங்க.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.