திருவிழா அல்லது பண்டிகை காலங்கள் என்றால் பொதுவாக பலரது வீடுகளில், இனிப்பு பலகாரம் செய்வது வழக்கம். இந்த வரிசையில், முறுக்கு, அதிரசம், உள்ளிட்ட பலகாரங்கள் தான் நம் நினைவுக்கு வரும். அதே சமயம், சில குறிப்பிட்ட ஊர்களில் ஃபேமஸான பலகாரங்களும் இருக்கும். அந்த வகையில் திண்டுக்கல் ஃபேமஸ் பால்பன் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
மைதா மாவு- 1 கப்
சர்க்கரை- 1 கப்
ஏலக்காய் தூள்- 1 டீஸ்பூன்
தயிர்- கால் கப்
நெய்- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பேக்கிங் சோடா- 1 டீஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
முதலில் முக்கால் கப் சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அதனுடன் மைதா மாவு, ஏலக்காய் தூள், தயிர், பேக்கிங் சோடா, உப்பு நெய் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு போல கொஞ்சம் இலக்கமாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் மீதி உள்ள சர்க்கரை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாகுவடிவில் தயார் செய்யவும். அதன்பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் சேர்த்தால் எடுத்தால் சுவையான பால்பன் தயார். நீங்களும் ட்ரைப்பண்ணி பாருங்க.