ஒரு தட்டு சாதத்தை காலி செய்யும் அளவுக்கு சுவை தரும், பூண்டு ஊறுகாய் தயார் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்
கடுகு – ஒன்னரை டீஸ்பூன்
வெந்தயம் – முக்கால் டேபிள் ஸ்பூன்
Advertisment
Advertisements
பூண்டு – கால் கிலோ
நல்லெண்ணெய் – ஒரு குழி கரண்டி
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
கட்டி பெருங்காயம் – சிறிதளவு
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 அரைடீஸ்பூன்
செய்முறை
முதலில் கடுகு வெந்தயம் இரண்டையும் நன்றாக வறுத்து பொடி செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் உரித்து கழுவி, தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துள்ள பூண்டை சேர்த்து வதக்கவும்.
அடுத்த அந்த பூண்டுடன் புளி சேர்த்து வதக்கவும். இறுதியாக புளி மற்றும் பூண்டை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சிறிது பூண்டை மட்டும் தனியாக எடுத்து இடித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, கட்டி பெருங்காயம், மஞ்சள் தூள் மிளகாய் தூள், தூள் பெருங்காயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
இந்த தாளிப்பில், அரைத்து மற்றும் அடித்து வைத்துள்ள பூண்டை சேர்த்து நன்றாக கிண்டி, இறுதியாக முதலில் அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தய பொடியை சேர்த்து இறக்கினால் சுவையான பூண்டு ஊறுகாய் தயார்.