அரிசி மாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மென்மையான, உணவு தான் இடியாப்பம். நூடல்ஸ் போன்று இருக்கும் இந்த உணவு ஆவியில் வேகவைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மிகவும் இலகுவான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய ஒரு உணவு. இதனால் நோயாளிகளுக்கும், முதியவர்களுக்கும் இது சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக காலை அல்லது இரவு உணவாக சாப்பிடலாம்.
இந்த இடியாப்பத்தை ரேஷன் அரிசியில் செய்தால் எப்படி இருக்கும்? எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
ரேஷன் பச்சரிசி – 4 படி
இட்லி அரிசி – ஒரு படி
செய்முறை:
முதலில் அரிசி இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக கழுவி தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு, கை தொடும் அளவுக்கு சூடாக உள்ள தண்ணீரில், அரிசியை ஊற வைக்கவும்.
2 மணி நேரம் ஊற வைத்த அரிசியை எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து மொறு மொறு என்ற பதத்தில் எடுத்துக்கொள்ளவும். இந்த அரிசியை இடியாப்பத்திற்கு என்று சொல்லி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.
மிகவும் நைசாக அரைத்த இந்த மாவை ஒரு வருடம் வரை ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம். இது சுடுதண்ணியில் ஊறிய அரிசியில் அரைத்த மாவு என்பதால், பிசையும்போது தண்ணீர் லேசான சூடு இருந்தால் போதும்.
லேசான சூட்டுடன் தண்ணீர் சேர்த்து பிசைந்த இந்த மாவில், இடியாப்பம் பிழிந்து எடுத்தால் சுவையான மற்றும் சாஃப்ட்டாக இடியாப்பம் ரெடி. நீங்களும் டரை பண்ணி பாருங்க.