/indian-express-tamil/media/media_files/2024/10/17/hLhmjgWX8EK3sUiUanRW.jpg)
தமிழ்நாட்டில் விளையும் ஒரு வகை பாரம்பரிய அரிசி வகைதான் இந்த கருப்பு கவுனி அரிசி. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள இந்த அரிசியில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதில் அந்தோசயனின் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள செல்களுக்கு சேதம் விளைவிக்கும் கட்டற்ற தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் இருக்கும் நிறைந்த கிளைசெமிக் குறியீடு காரணமாக இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அதிக நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் ஆரோக்கியமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகள் உள்ளன, அவை கண் ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.
இந்த கருப்பு கவுனி அரிசியை வைத்து சாதம் மட்டுமல்லமல், இட்லிக்கு மாவு அரைப்பது போல் அரைத்து இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளையும் செய்து சாப்பிடலாம். இந்த அரிசியில் இட்லி மாவு அரைக்கும்போது, 2 டம்பளர் கருப்பு கவுனி, அதே அளவு வீட்டில் பயன்படுத்தப்படும் இட்லி அசிரி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், 4 ஸ்பூன் பச்சரிசி சேர்த்துக்கொள்ளவும். இதற்கு ஒரு டம்ளர் அளவு உளுந்து எடுத்துக்கொள்ளலாம். அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்க்க வேண்டும்.
இந்த அரிசி சீக்கிரமாவே ஊறிவிடும் என்பதால், 5 மணி நேரம் மட்டும் ஊறினால் போதுமானது. முதலில் உளுந்து வெந்தயம் சேர்த்த கலவையை அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு கருப்பு கவுனி அரிசியை அரைக்கவும். நடுவில் நடுவில் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அரிசி மற்றும் உளுந்தமாவை ஒன்றாக இணைந்து உப்பு சேர்த்து நன்றாக கலக்கிவிட வேண்டும். இந்த கலவை 5 மணி நேரம் ஊறிய பிறகு, அதனை எடுத்து பயன்படுத்தலாம். இந்த மாவில் இட்லி, தோசை, பணியாரம், ஆப்பம் உள்ளிட்ட அனைத்து உணவுகளையும் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.