/indian-express-tamil/media/media_files/2025/08/21/masala-poori-2025-08-21-14-58-10.jpg)
சுவையான மற்றும் காரசாரமான ரோட்டுக்கடை மசாலா பூரி என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? இந்த அருமையான உணவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எளிதாக எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த பட்டாணி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1 பெரியது
வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 4-5 பல்
இஞ்சி - 1 சிறிய துண்டு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
பச்சை மிளகாய் – 2
புதினா, கொத்தமல்லி
பூரி - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு
பொடியாக நறுக்கிய தக்காளி - சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு
கேரட் துருவல் - சிறிதளவு
செய்முறை
காய்ந்த பட்டாணியை இரவே தண்ணீரில் ஊறவைக்கவும்.ஊறவைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சிறிது உப்பு போட்டு 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
வெந்ததும், பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை தனியாக எடுத்து மசித்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, அதில், பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் சீரகத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது, மசித்து வைத்துள்ள பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கு கலவையை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
மசாலா சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும், அடுப்பை அணைத்து விடலாம். ஒரு தட்டில் சில பூரிகளாக எடுத்து உடைத்துக்கொள்ளவும். அதன் மேல் சூடான மசாலாவை ஊற்றவும். இறுதியாக, அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் ஓமப்பொடியை தூவி பரிமாறவும். இப்போது உங்கள் சுவையான ரோட்டுக்கடை மசாலா பூரி தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.