/indian-express-tamil/media/media_files/2025/05/24/2UZAAcLFz1jcySPfaUA2.jpg)
முறுக்கு என்றாலே பலருக்கும் கொண்டாட்டம்தான். அதுவும் வீடே மணக்கும் பச்சரிசி முறுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். மொறுமொறுப்பான, சுவையான இந்த முறுக்கை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 2 கப் (300 கிராம்)
கடலை மாவு – 50 கிராம்
சீரகம் – ½ டீஸ்பூன்
எள்ளு – ½ டீஸ்பூன்
உப்பு – ¼ டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 200 மில்லி.
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, சீரகம், எள்ளு, உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வெண்ணெய் சேர்த்த்து நன்கு கலக்கவும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் தளர்வாகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக் கூடாது.
பிசைந்த மாவை 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து, எண்ணெய் சூடானதும், அச்சு முறுக்கு அச்சினை எண்ணெயில் போட்டு சூடுபடுத்தவும். சூடான அச்சை மாவில் அச்சு முக்கால் பாகம் மூழ்கும் வரை முக்கி, பின்னர் சூடான எண்ணெயில் முக்கி, அச்சை மெதுவாக அசைத்து முறுக்கை எடுக்கவும்.
முறுக்கு பொன்னிறமாக மாறியதும், அதை எண்ணெயிலிருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மீதமுள்ள மாவையும் இதேபோல் சுட்டு எடுக்கவும்.இப்போது சுவையான அச்சு முறுக்கு தயார். இதனை காற்று புகாத டப்பாவில் சேமித்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.