அடிக்கடி சப்பாத்தி, பூரி செய்வீங்களா? அப்போ இந்த ரெசிபி உங்களுக்கு தான்: பன்னீர் வச்சி இப்படி செய்யுங்க

சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்ற ஒரு வட இந்திய உணவுதான் பனீர் புர்ஜி. இதைச் செய்வது மிகவும் எளிது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்தச் சுவையான உணவைத் தயாரிக்கலாம்.

சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்ற ஒரு வட இந்திய உணவுதான் பனீர் புர்ஜி. இதைச் செய்வது மிகவும் எளிது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்தச் சுவையான உணவைத் தயாரிக்கலாம்.

author-image
WebDesk
New Update
paneer

சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்ற ஒரு வட இந்திய உணவுதான் பனீர் புர்ஜி. இதைச் செய்வது மிகவும் எளிது. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இந்தச் சுவையான உணவைத் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்

பனீர் - 200 கிராம்

சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

தக்காளி - 2

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

மல்லித் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

செய்முறை

Advertisment

முதலில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், சீரகம் சேர்த்து பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இப்போது, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது நன்றாகக் குழையும் வரை வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கிளறவும். மசாலா வாசம் வரும் வரை வதக்கவும்.

Advertisment
Advertisements

அடுத்து, துருவிய பனீரைச் சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலக்கவும். கடைசியாக, கரம் மசாலா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, அடுப்பை அணைக்கவும். இப்போது, சுவையான பனீர் புர்ஜி தயார்! இதை சூடான சப்பாத்தி அல்லது பூரியுடன் பரிமாறலாம்.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: