பாசிப்பருப்பு இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான உணவுப் பொருள். இதில் புரதம், நார்ச்சத்து, கார்போஹைடிரேட், வைட்டமின்கள் (A, B, C, E), மற்றும் தாதுக்கள் (இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம்) போன்றவை அதிகமாக உள்ளன. பாசிப்பருப்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது எளிதில் செரிமானமாகிறது. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் இதை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி பல நன்மைகள் அடங்கியுள்ள பாசிப்பருப்பில் அல்வா செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்?
தேவையான பொருட்கள்:
பாசிபருப்பு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் அரை கப்
தண்ணீர் 2 கப்
பால் 1 கப்
ஏலக்காய்பொடி கால் டீஸ்பூன்
முந்திரி, திராட்சை சிறிது (நெய்யில் வறுக்கவும்)
செய்முறை:
ஒரு வாணலியில் பாசிபருப்பை பொன்னிறமாக மாறி நறுமணம் வரும் வரை வறுக்கவும். வறுத்த பருப்பு சூடு ஆறியபிறகு, நன்கு கழுவி மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து, ஒரு கனமான கடாயில் நெய் ஊற்றி, அரைத்த பருப்பு மாவை சேர்க்க வேண்டும். தட்டில் ஒட்டாமல் வரும் வரை கிளறி, பச்சை வாசனை போவதற்கும் நன்றாக வெந்து வரும்வரை சமைக்கவும். அதன்பிறகு, அதில், சர்க்கரை மற்றும் பால் சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்து மீண்டும் அல்வா இளகி, பிறகு கெட்டியாகும். அல்வா கெட்டியாக, கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும் வரை, அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். இறுதியாக, ஏலக்காய்த்தூள் மற்றும் வறுத்த நட்ஸ்களைச் சேர்த்து நன்கு கலக்கி இறக்கினால் சுவையான பாசிப்பருப்பு அல்வா ரெடி.