/indian-express-tamil/media/media_files/2025/07/01/rasam-2025-07-01-15-49-25.jpg)
நீங்கள் தினமும் வைக்கும் ரசத்தை ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள். இதன் பிறகு, ரசத்தை யாரும் சாப்பிட மாட்டீர்கள், அத்தனை ருசியில் குடிப்ப்பீர்கள்.
இரண்டு முழுப் பூண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த முழுப் பூண்டுகளை ஒரு சின்னக் கம்பியில் குத்தி, அப்படியே அடுப்பின் தீயில் அல்லது ஒரு தீயில் நன்றாக வாட்டி எடுங்கள். பூண்டிலிருந்து நல்ல வாசம் (ஃப்ளேவர்) வெளிவர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் வெளியில் எடுத்து, தோல்களை நீக்கிவிட்டு, பூண்டுப் பற்களை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சரியான அளவுக்குச் சீரகம் மற்றும் மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். கூடவே, ஒரு ஆறு நீட்டு மிளகாயை (காய்ந்த மிளகாயை) எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மிளகாயையும் ஒரு சின்னக் கம்பியில் குத்தி, அதையும் நெருப்பில் வாட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் ஒரு எலுமிச்சம் பழ சைஸில் புளியை உருட்டி வைத்துக்கொள்ளுங்கள். இதைக் கொஞ்சம் சூடான நீரில் ஊற வைக்கவும். 4 தக்காளிகளை எடுத்து, கைகளால் நன்றாகப் பிசைந்து விடுங்கள்.
இந்தத் தக்காளிக் கரைசலுடன், நாம் கரைத்து வைத்த புளியையும் (புளிக் கரைசலையும்) சேருங்கள். நாம் எடுத்து வைத்த வாட்டிய பூண்டு, சீரகம், மிளகு மற்றும் வாட்டிய மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த அரைத்த விழுதை, புளி-தக்காளி கலவையுடன் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொள்ளுங்கள். இது கூடத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
அடுத்து சிறிது பெருங்காயம் மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து, லேசாக ஒரு கொதி (நொறுங்கிப் பொங்க ஆரம்பிக்கும் வரை) வரும் அளவுக்கு அடுப்பில் வைக்கவும். இதற்கு நாம் எப்போதும் போடும் தாளிப்புப் போல தாளிப்புப் போட்டு, அடுப்பிலிருந்து இறக்கி வையுங்கள். அருமையான, மணம் கமழும் ரசம் ரெடி! இந்த ரசத்தை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். புது அனுபவமாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us