செஃப் தீனா ஸ்டைலில் ஒரு மராட்டிய ரெசிபி ரசவாங்கி எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
பூசனிக்காய் – ஒரு கிலோ
நிலக்கடலை – 100 கிராம்
Advertisment
Advertisements
துவரம்பருப்பு – 200 கிராம்
மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – 4 டீஸபூன்
தேங்காய் – அரை மூடி
காய்ந்த மிளகாய் – 20
மிளகு ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
பெருங்காயம் – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
கடுகு ஒரு டேபிள் ஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
கருவேப்பிலை ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் துவரம்பருப்பு, வேர்க்கடலையை நன்றாக வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பூசனிக்காயை நறுக்கி வேகவைக்கவும். பூசனிக்காய் நன்றாக வெந்தவுடன், அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், மல்லி, கடலைப்பருப்பு, மிளகு, துருவிய தேங்காய் சேர்த்து தாளிக்கவும். இந்த கலவையை நன்றாக தாளித்தவுடன் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து காடாயில் வேக வைத்த பூசனிக்காயை சேர்த்து, அதில்’ வேக வைத்த வேர்கடலை, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து, தாளித்து அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்டையும் அதில் சேர்க்கவும்.
அடுத்து புளி கரைசல், எல்லாவற்றையும் கலந்து கொதிக்க வைக்கவும். இந்த கலவை ஓரளவு கெட்டியாக வந்தவுடன், இறக்கிவைத்துவிடவும்.
அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து, வேக வைத்து இறக்கி வைத்துள்ள குழம்பில் கொட்டினால், சுவையான ரசவாங்கி ரெடி.