எந்த காய்கறியும் வேணாம்... கிள்ளிப் போட்ட சாம்பார்; ஈஸி டிப்ஸ்!

சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, இந்தச் சாம்பாருடன் சாப்பிடும்போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். மிக எளிமையாக, ஆனால் மிகுந்த சுவையுடன் இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, இந்தச் சாம்பாருடன் சாப்பிடும்போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். மிக எளிமையாக, ஆனால் மிகுந்த சுவையுடன் இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

author-image
WebDesk
New Update
Sambar

வீட்டில் காய்கறிகள் இல்லாத சமயங்களில், இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பாரை செய்து அசத்துங்கள். சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, இந்தச் சாம்பாருடன் சாப்பிடும்போது அதன் சுவை அற்புதமாக இருக்கும். மிக எளிமையாக, ஆனால் மிகுந்த சுவையுடன் இந்த மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

Advertisment

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 கப்

தண்ணீர் - 2 கப்

Advertisment
Advertisements

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 20

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 4

தக்காளி - 3

எண்ணெய் - 1 ஸ்பூன்

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு 

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1/2 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/4 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 1 

காய்ந்த மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

செய்முறை:

முதலில், ஒரு கப் துவரம்பருப்பை நன்கு கழுவி குக்கரில் சேர்க்கவும். அத்துடன் இரண்டு கப் தண்ணீர், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இருபது சின்ன வெங்காயம், பத்து பல் பூண்டு, நாலு பச்சை மிளகாய், மூன்று தக்காளி, மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.

குக்கரில் உள்ள பருப்பு கலவை ஆறியதும், அதை நன்கு மசித்து அல்லது கடைந்து தனியே வைக்கவும். இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, சீரகம், மற்றும் சிறிதளவு வெந்தயம் போட்டு தாளிக்கவும். அடுத்து, ஒரு பெரிய வெங்காயம் மற்றும் நாலு காய்ந்த மிளகாயைக் கிள்ளி சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

இதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், கடைந்து வைத்துள்ள துவரம்பருப்பு கலவையை தாளிப்புடன் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.சிறிய நெல்லிக்காய் அளவு புளியை, தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, சாம்பாருடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

சாம்பார் நன்கு கொதித்து, ஓரளவு கெட்டியான பதம் வந்த பிறகு, சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான்! சுவையான மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் ரெடி.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: