எண்ணெய் வேண்டாம்; வறுக்கவும் வேண்டாம்: செம்ம டேஸ்டியான டிஃபன் சாம்பார்; வெங்கடேஷ் பட் ரெசிபி

எண்ணெய் இல்லாமல், எதையும் வறுக்காமல் சாம்பார் செய்ய முடியுமா? வெங்கடேஷ் பட் செய்யும் இந்த டிஃபன் சாம்பாரை ட்ரை பண்ணலாமா?

எண்ணெய் இல்லாமல், எதையும் வறுக்காமல் சாம்பார் செய்ய முடியுமா? வெங்கடேஷ் பட் செய்யும் இந்த டிஃபன் சாம்பாரை ட்ரை பண்ணலாமா?

author-image
WebDesk
New Update
Sambar Nh

எண்ணெய் இல்லாமல், எதையும் வறுக்காமல் சாம்பார் மசாலா செய்ய முடியுமா? வெங்கடேஷ் பட் செய்யும் இந்த டிஃபன் சாம்பாரை ட்ரை பண்ணலாமா?

Advertisment

தேவையான பொருட்கள்:

காஷ்மீர் மிளகாய் – 100 கிராம்

காய்ந்த மிளகாய் – 100 கிராம்

Advertisment
Advertisements

மல்லி – 200 கிராம்

சீரகம் – 100 கிராம்

மிளகு – 100 கிராம்

வெந்தயம் – 100 கிராம்

பாசி பருப்பு – 150 கிராம்,

துவரம்பருப்பு – 150 கிராம்

சின்ன வெங்காயம் – 200 கிராம்

முருங்கைக்காய் – 2 பெரியது.

புளி – 50 கிராம்

வெல்லம் – 50 கிராம்

தக்காளி – 4

கருவெப்பிலை சிறிதளவு

நெய் – 2 டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – 4

கட்டி பெருங்காயம் – 15 கிராம்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை: 

முதலில், காஷ்மீர் மிளகாய், காய்ந்த மிளகாய், மல்லி சீரகம் மிளகு கிராம் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்த ஒன்றாக மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

அடுத்து, பாசி பருப்பு துவரம்பருப்பு சின்ன வெங்காயம் முருங்கைக்காய் (நறுக்கியது) ஒன்றாக சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில், வேகவைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.

அதன்பிறகு ஒரு பானில் நெய் விட்டு, அதில், கருவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அன்பிறகு புளி கரைசலை அதில் சேர்த்து, அதனுடன் வெள்ளத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த கலவை நன்றாக கொதித்தவுடன், வேக வைத்து தனியாக எடுத்து வைத்துள்ள, முருங்கைக்காய் கலவையை அதில் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

இந்த கலவை கொதித்தவுடன், அதை இறக்கி தனியாக வைத்துவிட்டு, மீண்டும் ஒரு பானில், எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, ஸ்லைசாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வணக்கவும்.

அதன்பிறகு நறுக்கிற கொத்தமல்லி இலையை கொதிக்க வைத்து தனியாக எடுத்து வைத்துள்ள சாம்பாரில் தூவி விட வேண்டும். அடுத்து பானில் வெங்காயம் வணங்கியவுடன் அதில் பெருங்காய கரைசலை சேர்க்கவும்.

இந்த கரைசல் வெங்காயத்துடன் நன்றாக கலந்தவுடன், முன்பு அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை அதில் சேர்த்து நன்றாக கிளரவும். இந்த கலவையை சாம்பாரில் சேர்த்து,மீண்டும் ஒருமுறை சாம்பாரை நன்றாக கொதிக்க வைத்தால் சுவையான டிஃபன் சாம்பார் தயார். 

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: