Advertisment

சாம்பார் வச்சு முடிச்சதும் இதை மட்டும் சேருங்க: செம்ம டேஸ்டி; வீடே மணக்கும்!

பருப்பு மற்றும் இதர பொருட்களை சரியான அளவில் பயன்படுத்தி சாம்பார் செய்தாலும், சில முறை. அது டேஸ்ட் இல்லாமல் போய்விடுவது சமைப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தும்.

author-image
WebDesk
New Update
kitchen tips to preserve Sambar for day in tamil

உடல் ஆரோக்கியத்திற்கு சாப்பாடு முக்கியம் என்பது போல், எந்த உணவாக இருந்தாலும், அதற்கு சாம்பார் முக்கிய டிஷ்ஷாக இருக்கும் இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என எந்த உணவாக இருந்தாலும், அதில் சாம்பார் சேர்த்து சாப்பிடலாம். இந்த சாம்பாரை டேஸ்டாக வைத்தால் தான் அதை சாப்பிடுபவர்களுக்கு பிடித்தமாக இருக்கும்.

Advertisment

பொதுவாக உணவு சமைப்பவர்கள், அதில் சேர்க்க வேண்டிய பொருட்களை சரியான அளவில் சேர்த்தாலும், கைப்பக்குவம் என்று சொல்வார்கள். கைப்பக்குவம் இல்லை என்றால், அந்த சாம்பார் எவ்வளவு அளவாக சரியான முறையில் செய்தாலும், டேஸ்ட் சற்று குறைவாகத்தான் இருக்கும் என்று சொல்வார்கள். இந்த நிலையை போக்க பலரும் பல டிப்ஸ்களை கொடுப்பார்கள்.

அந்த வகையில் ஒரு டிப்ஸ் தான் இது. பருப்பு இல்லாமல் சாம்பார் வைப்பது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. இதற்கு மாற்று வழி சிலவற்றை கூறினாலும், அது அவ்வளவு சரியாக இருக்குமா என்பது சந்தேகம் தான். பருப்பு மற்றும் இதர பொருட்களை சரியான அளவில் பயன்படுத்தி சாம்பார் செய்தாலும், சில முறை. அது டேஸ்ட் இல்லாமல் போய்விடுவது சமைப்பவர்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தும்.

இந்த சங்கடத்தில் இருந்து தப்பிக்க, சாம்பார் செய்து முடித்தவுடன், இந்த ஐடியாவை பயன்படுத்தலாம். ஒரு டெபிள் ஸ்பூன் சீரகத்தை நன்றாக இடித்து, அதில், துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன் அதில் சேர்த்து இடிக்க வேண்டும். அடுத்து அதில் 5 பெரிய பல் பூண்டை சேர்த்து இடிக்கவும். இந்த கலவையை தயார் செய்து வைத்துள்ள சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கவும். எந்த மசாலாவை பயன்படுத்தி சாம்பார் வைத்திருந்தாலும், இந்த மாதிரி செய்யும்போது சாம்பார் டேஸ்டாக இருக்கும். 

Tamil Food Recipe
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment