சாஃப்ட் சப்பாத்திக்கு ஒரு ஸ்பூன் தயிர்... 2 நாள் ஆனாலும் அப்படியே இருக்கும்; ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!
கோதுமை மாவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், செரிமானத்திற்கு நல்லது மற்றும் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
கோதுமை மாவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், செரிமானத்திற்கு நல்லது மற்றும் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
வட இந்தியா மட்டுமல்ல, தென்னிந்திய மக்களும் தற்போது தங்கள் தினசரி உணவில் ஒரு வேளை சப்பாத்தியை சேர்த்துக்கொள்ளும் வழக்கத்திற்கு வந்துவிட்டார்கள். கோதுமை வடநாட்டில் விளைகிறது என்றாலும் கூட, தமிழ்நாட்டிலும் சப்பாத்திக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. சப்பாத்திக்கான கோதுமை மாவு, முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படுவதால், சப்பாத்தி நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
Advertisment
கோதுமை மாவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், செரிமானத்திற்கு நல்லது மற்றும் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இது ஒரு நல்ல தேர்வாகக் கருதப்படுகிறது. சப்பாத்தி பொதுவாக குழம்புகள், பருப்பு வகைகள், காய்கறிகள், மற்றும் இறைச்சி உணவுகளுடன் சேர்த்து சாப்பிவார்கள். இது இந்தியாவின் பல பகுதிகளில் 3 வேளையும் உணவாகப் பரிமாறப்படுகிறது.
சப்பாத்தி பிரியர்கள் தமிழகத்தில் இருந்தாலும், சில வீடுகளில் சப்பாத்தி சாஃப்ட்டாக வராது. சப்பாத்தி செய்து முடித்தவுடன், காய்ந்து போன மாதிரியான ஒரு தோற்றத்தில் வந்துவிடும். இதனால் 4 சப்பாத்தி சாப்பிடும் ஒருநபர் 2 சப்பாத்தி மட்டுமே சாப்பிடுவார். இந்த சப்பாத்தி சாஃப்ட்டாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே இன்றைய இல்லத்தரசிகளின் முக்கிய யோசனைகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய வழி இருக்கிறது.
Advertisment
Advertisements
சப்பாத்தி நல்லா சாஃப்டா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, அதனுடன் கொஞ்சம் தயிர் சேர்த்து மிக்ஸ் பிசைந்து 2 மணி நேரம், கழித்து சப்பாத்தி செய்தால், சப்பாத்தி சூப்பர் சாஃப்டா இருக்கும். சப்பாத்தி எளிமையானது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதால், சாப்ட்டாக வருவதற்கு இந்த முறையில் செய்து பாருங்கள்.