கருப்பு உளுந்து ஊற 3 மணி நேரம் போதும்; மாவு அரைக்கும் போது இத போடக்கூடாது: மொறு மொறு வடை சுட இது முக்கியம்!

பொதுவாக, வடைக்கு மாவு அரைக்கும்போது உளுந்து நன்று ஊறிய பின்தான் அரைக்க வேண்டும். அதில், தோல் நீக்காமல் இருக்கும் உளுந்து 3 மணி நேரம் ஊற வேண்டும்.

பொதுவாக, வடைக்கு மாவு அரைக்கும்போது உளுந்து நன்று ஊறிய பின்தான் அரைக்க வேண்டும். அதில், தோல் நீக்காமல் இருக்கும் உளுந்து 3 மணி நேரம் ஊற வேண்டும்.

author-image
WebDesk
New Update
Rava vadai

திருவிழா காலங்கள் மட்டுமல்லாமல், இப்போது நினைத்தபோதெல்லாம் வடை செய்து சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக, இட்லிக்கு மாவு அரைக்கும்போது அதில்உளுந்து மாவை தனியாக எடுத்து வைத்து வடை செய்து சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் உளுந்து வடைக்கு தனி இடம் உண்டு.

Advertisment

அதேபோல் இந்த வடையை செய்வது அவ்வளவு கஷ்டம் இல்லை என்று சொன்னாலும், பலருக்கும் இந்த வடை பக்குவமாக வருவதில் சற்று சிரம்ம் இருக்கும். இதை தவிர்க்க அவர்களும் ப டிப்ஸ்களை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் உளுந்து வடைக்கு மாவு அரைக்கும்போது இந்த டிப்ஸை ஃபாலே பண்ணுங்க என்று ஒருவர் கூறியுள்ளார்.

பொதுவாக, வடைக்கு மாவு அரைக்கும்போது உளுந்து நன்று ஊறிய பின்தான் அரைக்க வேண்டும். அதில், தோல் நீக்காமல் இருக்கும் உளுந்து 3 மணி நேரம் ஊற வேண்டும். அதுவே, தோல் நீங்கிய வெள்ளை உளுந்தாக இருந்தால் ஒரு மணி நேரம் ஊறினாலே போதுமானது. அதேபோல் மாவு அரைக்கும்போது உளுந்துக்கு கால் பங்கு பச்சரிசி சேர்க்க வேண்டும். பச்சரிசி இல்லை என்றால் அரிசிமாவு சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பாக உளுந்து மாவு அரைக்கும்போது உப்பு சேர்க்க கூடாது. அரைத்த பின்புதான் உப்பு சேர்க்க வேண்டும். அரைக்கும்போதே உப்பு சேர்த்தால் உளுந்து மாவு நீர்த்துபோகும். அதன்பிறகு பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து மாவை நன்கு பிசைத்து வடை சுட்டு எடுத்தால் மொரு மொருவென வடை சூப்பராக வரும் என்று கூறியுள்ளார்.

Advertisment
Advertisements
Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: