தென்னிந்தியாவின் உணவுப் பிரியர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு உணவு வடை கறி. இட்லி, தோசை, பூரி போன்ற உணவுகளுடன் இதைச் சேர்த்து சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் அதிகமாகும். அசைவ உணவை விரும்பாதவர்களுக்கும், ஒரு புதிய சுவையை அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் வடை கறி ஒரு சிறந்த தேர்வாகும்.
Advertisment
கடலைப்பருப்பால் செய்யப்படும் வடைகளை, காரசாரமான மசாலா கிரேவியில் சமைத்து, அதன் சுவையை மேம்படுத்துவதே வடை கறியின் சிறப்பு. இந்த வடகறியை வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 250 கிராம்
Advertisment
Advertisements
வெங்காயம் – 3 பெரியது
மஞ்சள் தூள் – 1⁄2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது (நசுக்கியது) – 1 கரண்டி
முதலில் கடலைப்பருப்பை 4 மணி நேரம் நன்றாக ஊற வைத்து, அரைத்து வடை பதத்திற்கு எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பிறகு இதை பக்கோடா போல் எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தாளிக்கவும். அதன்பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு தண்ணீர் சேர்த்து இந்த மசாலாவை கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன், பொறித்து வைத்துள்ள வடையை அதில் சேர்த்து மூடி வைத்துவிடவும். 10 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு உப்பு சேர்த்து புதினா இலைகளை சேர்க்க வேண்டும்.
இறுதியாக ஏலக்காய், பட்டை, லவங்கம், அன்னாசிப்பூ சேர்த்து அரைத்த பொடியை அதில் தூவி இறக்கி 5 நிமிடங்கள் கழித்து பரிமாறலாம். சுவையாக வடகறி தயார். நீங்களும் ட்ரைபண்ணி பாருங்க.