/indian-express-tamil/media/media_files/2025/09/29/moornh-2025-09-29-15-41-14.jpg)
சுவையான மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த முறையில் செய்தால் மோர் குழப்பு பிடிக்காதவர்கள் கூட அதன் வாசனையை வைத்து விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
தயிர் தேவையான அளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்ச மிளகாய்ஒன்று
கொத்தமல்லி சிறிதளவு
எண்ணெய் தாளிக்கத் தேவையான அளவு
கடுகு சிறிதளவு
சீரகம் சிறிதளவு
காய்ந்த மிளகாய் 1-2
செய்முறை:
முதலில், தயிரில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்றாக அடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு சிறிய இஞ்சி துண்டு, ஒரு பச்ச மிளகாய், மற்றும் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம், மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிய விடுங்கள். தாளித்த எண்ணெயிலேயே, நீங்கள் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி, பச்ச மிளகாய், கொத்தமல்லி கலவையைச் சேருங்கள். அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும், நீங்கள் அடித்து வைத்திருக்கும் தயிர்க் கலவையை (மஞ்சள் தூள், உப்பு சேர்த்தது) ஊற்றவும். தயிரை ஊற்றிய பிறகு, குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் முன், சூடாகி நுரைத்து வரும் பதத்திலேயே (மோர் குழம்பின் பதம்) அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான்! உங்கள் சுவையான மோர் குழம்பு தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.