/indian-express-tamil/media/media_files/2025/08/27/sundam-2025-08-27-00-01-09.jpg)
விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை போலவே, சுண்டலும் ஒரு முக்கியமான பிரசாதம். இது சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்தக் குறிப்பை பின்பற்றி, மசாலா சுண்டலை எளிதாகச் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 1 கப்
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பச்சைகாய் - 2
தேங்காய் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
இஞ்சி – 2 துண்டு
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 1
செய்முறை:
கொண்டைக்கடலையை இரவு முழுவதும் அல்லது 8 மணிநேரம் ஊறவைக்கவும். ஊறவைத்த கடலையை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேகவைக்கவும். கடலை குழையாமல், மென்மையாக வேக வேண்டும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில், துருவிய தேங்காய், இஞ்சி துண்டு, மல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து குறகுறப்பாக அரைத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும். கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதன்பிறகு நறுக்கிய வெங்கத்தை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் சேர்க்கவும். வேகவைத்த கொண்டைக்கடலையை வடிகட்டி, தாளித்த கலவையுடன் சேர்க்கவும். அனைத்தையும் நன்கு கலக்கி, மசாலா வாசனை வரும் வரை வதக்கவும். இப்போது சுவையான மசாலா சுண்டல் தயார்! விநாயகர் சதுர்த்தி அன்று இந்தப் பிரசாதத்தை படைத்து மகிழுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.