/indian-express-tamil/media/media_files/2025/01/19/kkPWnZXOrvLUZZx4bV1U.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில், இரவு உணவை சாப்பாத்தி என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதனால் வீட்டில் இருப்பவர்கள் எத்தனை சாப்பிடுவார்கள் என்று தெரிந்து அதற்கு ஏற்றபடி சப்பாத்தி செய்வார்கள். ஆனால் இந்த சப்பாத்தி மீதியாகிவிட்டால் அதை என்ன செய்வார்கள்? நீங்கள இப்படி செய்து பாருங்கள்
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி 3
எண்ணெய்
கடுகு,
சோம்பு
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை,
வெங்காயம்
இஞ்சி பூண்டு பெஸ்ட்,
தக்காளி
மஞ்சள் தூள் –
மிளகாய் தூள்
கரம் மசாலா
மிளகுத்தூள்
முட்டை
கொத்தமல்லி இலை
செய்முறை:
முதலில் சாப்பாத்தியை நன்றாக கிழித்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய், கடுகு, சோம்பு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம், இஞ்சி பூண்டு பெஸ்ட், தக்காளி, மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா, மிளகுத்தூள் சேர்த்து தாளித்துவிட்டு, 2 முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதன்பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து, கிழித்து வைத்துள்ள சப்பாத்தியை அதில் சேர்த்து பிரட்டி, இறுதியாக மல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான கொத்து சப்பாத்தி ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.