/indian-express-tamil/media/media_files/zhI0mHi0HbG3utE5wqrz.jpg)
கிருஷ்ண ஜெயந்தி என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சுவையான தின்பண்டங்கள்தான். அதில் முக்கியமானது இந்த குட்டி கை முறுக்கு. இதை சரியான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
உளுத்தம் மாவு - 1 கப் (பச்சரிசியை எந்த அளவுகோலில் அளக்கிறீர்களோ, அதே அளவில் 1 பங்கு உளுத்தம் மாவு)
சீரகம் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிய கட்டி (கட்டி பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து பயன்படுத்தவும்)
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - முறுக்கு பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் 1 கப் பச்சரிசியை எடுத்து 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு உலர்த்தி, நன்றாக அரைத்து சலித்துக்கொள்ளவும். பச்சரிசி மாவுடன், அதே அளவுகோலில் 1 பங்கு உளுத்தம் மாவை சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு, சீரகம், வெண்ணெய், பெருங்காயத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை மிருதுவாக பிசையவும். பிசைந்த மாவை எடுத்து, மூன்று விரல்களைப் பயன்படுத்தி குட்டி குட்டி முறுக்குகளாக பிழிந்துக்கொள்ளவும்.
இது பயிற்சி மூலம் மட்டுமே வரும். ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், முறுக்குகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். அவ்ளோதான், சுவையான கை முறுக்கு தயார். எல்லோரும் செய்து மகிழுங்கள்! இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.