வீட்டுல தேங்காய் மீதம் இருக்கா? இப்படி பொடி செஞ்சு வையுங்க: 10 நாள் ஆனாலும் கெடாது!

வீட்டில் தேங்காய் இருக்கிறது என்றால் அதனைவைத்து செப் தீனா ஸ்டைலில் இட்லிக்கு பொடி அரைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

வீட்டில் தேங்காய் இருக்கிறது என்றால் அதனைவைத்து செப் தீனா ஸ்டைலில் இட்லிக்கு பொடி அரைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ifly Poli

வீட்டில் தேங்காய் இருக்கிறது என்றால் அதனைவைத்து செப் தீனா ஸ்டைலில் இட்லிக்கு பொடி அரைப்பது எப்படி என்பதை பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்: 

தேங்காய் – 1

புளி – ஒரு நெல்லிக்காய் அளவு

Advertisment
Advertisements

இஞ்சி – ஒரு துண்டு

சீரகம் – 3 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 6-7 டீஸ்பூன்

காய்ந்த் மிளகாய் – 12-15 பீஸ்பூண்டு – 6-7 பீஸ்

மிளகாய் தூள் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடிவெல்லம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – கால் டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் ஒரு பான் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். அடுத்து இதில், துண்டு துண்டாக நறுக்கிய இஞ்சியை அதில் சேர்க்கவும். அதன்பிறகு புளி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

அடுத்து உளுத்தம் பருப்பு, காயந்த மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து இதில் இடித்த பூண்டை சேர்க்கவும். அதன்பிறகு துருவிய தேங்காய்யை அதனுடன் சேர்த்து வதக்கவும்.

தேங்காய் நன்றாக வறுபட்டவுடன், அதில் உப்பு மற்றும் பெருங்காய பொடியை சேர்க்கவும். கடைசியாக மிளகாய் தூய் சேர்த்து, கிளறிவிட்டு, சிறிதளவு வெள்ளத்தை அதில் சேர்க்கவும்.

நன்றாக கிளறிவிட்டு, அடுப்பில் இருந்து இறக்கி, சிறிது நேரம் ஆறவிட்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால், சுவையான இட்லி பொடி ரெடி.தோசை இட்லி என அனைத்திற்கும் இதனை வைத்து சாப்பிடலாம்.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: