/indian-express-tamil/media/media_files/2025/08/15/urad-bonda-2025-08-15-20-28-27.jpg)
மீந்துபோன சாதத்தை என்ன செய்வதென்று தெரியாமல் குழம்புகிறீர்களா? கவலை வேண்டாம்! அந்த சாதத்தை வைத்து சுவையான, மொறுமொறுப்பான போண்டா செய்யலாம். இது ஒரு எளிய மற்றும் விரைவான சிற்றுண்டி, மாலை நேரத்திற்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:
மீதமான சாதம் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில், சாதத்தை மிக்சியில் சேர்த்து, வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்று அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில், அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் தெளித்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிசைந்து வைத்த மாவில் இருந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான, மொறுமொறுப்பான சாதம் போண்டா தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.