சூப்பரான அருமையான கல்யாண வீடு ஸ்டைலில் பூரி குருமா கிழங்கு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் – அரைமூடி
நிலக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்’
Advertisment
Advertisements
சோம்பு – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – 5 பெரியது
முந்திரி -10
கடலை எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி – 2
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
உருளைக்கிழங்கு – கால் கிலோ
பச்சை பட்டாணி – 100 கிராம்
கருவேப்பிலை – ஒரு கொத்து
கரம் மசாலா 0 அரை டீஸ்பூன்
மல்லி இலை – ஒரு கைப்பிடி
நெய் – ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில், தேங்காய் துருவல், நிலக்கடலை, சோம்பு, வெங்காயம், முந்திரி ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் விட்டு, சோம்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து மஞ்சள் தூள், தேவையாள அளவு உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கு, பட்டாணி ஆகியற்றையும் சேர்த்து வதக்கவும். இந்த கலவையை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வரும்வரை வேக வைக்கவும்.
ஒரு விசில் வந்தவுடன், குக்கரை திறந்து, அதில் கருவேப்பிலை, மல்லி இலை, கரம் மசாலா சேர்த்து மீண்டும் கொதிக்கவைக்கவும். 2 நிமிடங்கள் கொதித்தவுடன், அதில், இறுதியாக நெய் சேர்த்து இறக்கினால் சுவையான பூரி குருமா ரெடி.