செஃப் தீனா ஸ்டைலில் பூசணிக்காய் பிட்லை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
Advertisment
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 750 கிராம்
கிராம் பருப்பு - 30 கிராம்
Advertisment
Advertisements
கொத்தமல்லி விதைகள் - 100 கிராம்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 50 கிராம்
கடுகு - 30 கிராம்
சீரக விதைகள் - 30 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
புளி - 50 கிராம்
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
வெள்ளை கொண்டைக்கடலை - 300 கிராம்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
நடுத்தர அளவு தேங்காய் - 1 எண்
கொத்தமல்லி இலைகள் - தேவைக்கேற்ப
வெள்ளை பூசணி - 1 கிலோ
தக்காளி - 300 கிராம்
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - 100 மிலி
கடலை எண்ணெய் - 100 மிலி
செய்முறை:
முதலில் ஒரு வாணலில், தேங்காய் எண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம், கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். அடுத்து துவரம்பருப்பு சேர்த்து லேசாக சிவந்தவுடன், அதில் மல்லி விதைகளை சேர்க்கவும்.
அடுத்து காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், தேங்காய் துருவல் பாதியை சேர்த்து தாளிக்கவும். தாளித்தவுடன் இதனை தனியாக எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில், கடலை எண்ணெய் சேர்த்து, காய்த மிளகாய், வெந்தயம், கடுகு சேர்த்து, தாளிக்கவும். அதன்பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய பூசணிக்காயை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் ஆகியவற்றுடள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியுடன் புளி கரைசல் சேர்த்து, பூசணிக்காயை வேகவிடவும்.
அதன்பிறகு தண்ணீர் சேர்த்து பூசணிக்காயை வேக வைத்து, அதில் ஊறவைத்து வேகவைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து, அரைத்து வைத்துள்ள பேஸ்டையும் அதனுடன் சேர்த்து வேகவைக்கவும்.
பூசணிக்காய் நன்றாக வெந்தவுடன், அதில் வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்கவைத்து இறக்க வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்து,சீரகம் கருவேப்பிலை பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து கொட்டி இறக்கினால் சுவையான பூசணிக்காய் பெட்லை தயார்.