New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/24/7YVcN9mWLUMn5a7nwraF.jpg)
காலையில் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் சுவையான அதேசமயம் சத்தான உணவைச் சமைப்பது கடினம். அதற்காகத்தான் இந்த ஒரு பானை சாம்பார் சாதம்.
வேலைக்கு செல்பவர்களுக்கு மதிய உணவை எடுத்துச் செல்வது சவாலான காரியம். காலையில் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் சுவையான அதேசமயம் சத்தான உணவைச் சமைப்பது கடினம். அதற்காகத்தான் இந்த ஒரு பானை சாம்பார் சாதம். இதைச் செய்ய எண்ணெய் தேவையில்லை, ஒரே பாத்திரத்தில் எல்லாம் முடிந்துவிடும் என்பதால் நேரமும் மிச்சமாகும்.
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
முழு பூண்டு பற்கள் - 6 முதல் 7
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
காய்கறிகள் - 1/2 கப் (முள்ளங்கி, கேரட், பீன்ஸ்)
தக்காளி - 2
வெங்காயம் - 1
தண்ணீர் - 4 கப்
புளிக்கரைசல் - 1 கப்
காயுஸ் கிச்சன் சாம்பார் பொடி - 2.5 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1/2 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
நெய் - தேவையான அளவு
செய்முறை
குக்கரில் அரிசி, துவரம் பருப்பு, நறுக்கிய காய்கறிகள், தக்காளி, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும். அடுத்து, தண்ணீர், புளிக்கரைசல், காயுஸ் கிச்சன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
குக்கரை மூடி, மிதமான தீயில் 4 விசில் வரும் வரை வேக விடவும். விசில் அடங்கியதும், குக்கரைத் திறந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி நன்கு கிளறவும். கடைசியாக, சுவையான இந்த சாம்பார் சாதத்துடன் சிறிது நெய் சேர்த்துப் பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.