New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/01/2-Copy-2-24.jpg)
நெய் வாசனயுடன் மணக்க மணக்க சாம்பார் சாதம் எப்படி செய்யலாம் என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
அரிசி – 2 டம்ளர்
துவரம்பருப்பு – 1 டம்பளர்
பாசி பருப்பு – அரை டம்பளர்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
சீரகம் – அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பச்சை மிளகாய் 2
கேரட், பீன்ஸ், பட்டாணி, முள்ளங்கி – அரை கிலோ
குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நெல்லிக்காய் அளவு – புளி
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
முந்திரி -10
கொத்தமல்லி – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி, துவரம்பருப்பு பாசிபருப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கூடவே, மஞ்சள் தூள், மற்றும் பெருங்காய தூள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பானில், எண்ணெய் கடுகு, சீரகம் வரமிளகாய் சேர்த்து,வதக்கி, அடுத்து வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி, முள்ளங்கி, கத்தரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அடுத்து குழம்பு மிளகாய் தூள், தனி மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
இறுதியாக தேவையான அளவு உப்பு சேர்த்து, நெல்லிக்காய் அளவு புளி கரைசலை சேர்த்து அதனுடன் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுத்து வேக வைத்துள் சாதத்தை அதனுடன் சேர்த்து கிளரவும்.
இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்து, சாதத்தில் சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான சாம்பார் சாதம் ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.