/indian-express-tamil/media/media_files/2025/08/17/cnjhdh-2025-08-17-23-09-43.jpg)
பொதுவாக, பொட்டுக்கடலை சட்னியை பலரும் செய்வார்கள். ஆனால் இதில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்யும்போது அதன் சுவை மொத்தமாக மாறிவிடும். இந்த முறையில் செய்தால் ரொம்ப டேஸ்டியா இருக்கும். பார்க்கலாமா?
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை - அரை கப்
தேங்காய் – அரை மூடி
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி இலை, புதினா, கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையான அளவு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
தேவையான அளவு தண்ணீர்
செய்முறை
அரை கப் பொட்டுக்கடலையுடன், தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சி,சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்தம்து அரைக்கவும். இப்போது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
சட்னிக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு, எப்போதும்போல கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்க்கவும். இதை இட்லி மீது ஊற்றிப் பிசைந்து சாப்பிடும்போது, அதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.