ரெண்டு பருப்பையும் ஒண்ணா ஊற வச்சு அரைத்து... சூடான கார போண்டாவுக்கு 'நச்' டிப்ஸ்!

எளிமையான முறையில் சுவையான கார போண்டா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

எளிமையான முறையில் சுவையான கார போண்டா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

author-image
WebDesk
New Update
arisi bonda

எளிமையான முறையில் சுவையான கார போண்டா எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?

Advertisment

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 1 கப் (250 கிராம்)

உளுத்தம் பருப்பு - 1/2 கப் (125 கிராம்)

Advertisment
Advertisements

தண்ணீர்

வெங்காயம் – 1

இஞ்சி

பச்சை மிளகாய் – 3

கறிவேப்பிலை

உப்பு - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

ஓமம் - 1/4 தேக்கரண்டி

அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை

எண்ணெய்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை பருப்பு,அரை கப் உளுத்தம் பருப்பு எடுத்து நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி ரெண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு மிக்ஸ்ர் ஜாரில் ஊற வைத்த பருப்பு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும். மாவுடன், பொடிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சி, நறுக்கிய மூன்று பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கறிவேப்பிலை. கொஞ்சம் உப்பு. ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், கால் டீஸ்பூன் ஓமம், மூன்று டேபிள் ஸ்பூன் அரிசி மாவு , பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை, சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் பொறிக்க தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும், கொஞ்சமாக மாவை எடுத்து சிறு போண்டாகளாக எண்ணெயில் போடவும். எல்லா பக்கமும் நன்றாக சிவந்து பொரிந்தவுடன் எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். கார போண்டாவை தேங்காய் சட்னி உடன் சூடாக பரிமாறவும்.

Tamil Food Recipe

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: