இயற்கையில் கிடைக்கும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று கருவேப்பிலை. சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த கருவேப்பிலை, மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்தது என்றாலும் கூட, சாப்பிடும்போது இதனை எடுத்து தனியாக வைக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. நம்மில் பலருக்கும் கருவேப்பிலை சாப்பிட்டால் முடி நன்றாக வளரும் என்ற பொதுவான நன்மைகள் தான் தெரியும். ஆனால் நமக்கு தெரியாத பல ஆரோக்கிய நன்மைகள் கருவேப்பிலையில் இருக்கிறது.
Advertisment
இது குறித்து, டாக்டர் மைதிலி தனது வீடியோ பதிவில், உணவில் சேர்க்கப்படும் கருவேப்பிலையை நாம் தினமும் எடுத்தக்கொள்ளும்போது நமது உடலில் பல்வேறு நோய்களை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதை கருவேப்பிலை தடுக்கும். கருவேப்பிலை இலையில் இயற்கையாகவே மகாநிம்பை என்ற அல்கைலைடு வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது நமது இதயத்திற்கு போகக்கூடிய ரத்த ஓட்டத்தை சீராக வைக்கும்.
மேலும் இதயத்தின் தசைகளையும் நன்றாக வலுவடைய செய்யும். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். இதயத்தில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும் திறன் கருவேப்பிலைக்கு உண்டு. தினமும் மோர் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதில் 4-5 கருவேப்பிலை இலைகளை சேர்த்து குடிக்கலாம். உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகமாகாமல் இருக்க கருவேப்பிலை பெரிய உதவியாக இருக்கும். இதனால் உடல் எடை அதிகமாகாமல் இருக்கும்.
ஒரு நாளைக்கு 8 கருவேப்பிலை இலைகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், கல்லீரலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கும், கருவேப்பிலை முக்கிய நன்மைகளை செய்கிறது. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டக்குள் கொண்டுவருதில் கருவேப்பிலை முக்கிய பங்காற்றுகிறது.
Advertisment
Advertisements
குறிப்பாக டைப் 2 சர்ச்கரை நோய் உள்ளவர்கள் கருவேப்பிலையை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது நாளடைவில் அவர்களின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படும். சருமம் பிரகாசமாக இருக்கும். ரத்ததத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி தூய்மைபடுத்தவும், தலைமுடி வளரவும், கருவேப்பிலை பெரிய நன்மைகளை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“