சமையல் செய்வதற்கு முக்கியமான தேவை அடுப்பும், நெருப்பும். இன்றைய காலக்கட்டத்தில் நெருப்பு இருந்தால் தான் சமைக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. அதே சமயம் பண்டைய காலக்கட்டத்தில், நெருப்பு இல்லாமல், சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். இப்போதும் ஒரு சில இடங்களில் அடுப்பும் நெருப்பும் பயன்படுத்தாமல் அறுசுவை உணவுகளை சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
அடுப்பும், நெருப்பும் இல்லாமல் சமைத்தை உணவுகளை கொடுப்பதற்காக தனியாக ஹோட்டல்களும் இப்போது அதிகமாக உருவாகி வருகிறது. அந்த வகையில் நமது வீட்டிலேயே அடுப்பும் நெருப்பும் இல்லாமல் ஈஸியாக செய்யக்கூடிய உணவு பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சீரகம் புதினா சட்னி
தேவையான பொருட்கள்
புதினா – ஒரு கட்டு
சீரகம் ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை – 1
செய்முறை:
முதலில் புதினா இலைகளை காம்பில் இருந்து தனித்தனியாக பிரிந்து எடுத்துக்கொண்டு, அதை நன்றாக கழுவி சுத்தம் செய்து, அதனுடன் சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இந்த கலவையில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான சீரகம் புதினா சட்னி தயார். ட்ரை பண்ணி பாருங்க.
மாங்காய் ஓமம் சட்னி
தேவையான பொருட்கள்:
பச்சை மாங்காய் 1
ஓமம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
முதலில் மாங்காயை கழுவி, தோல் சீவி பொடியாக நறுக்கிக் அதனுடன் ஓமம், தேவையான அளவு உப்பு சேர்த்து, மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த கலவையை நன்றாக கலக்கி சாதம் உட்பட பல உணவுகளுக்கு பயன்படுத்தி சாப்பிடலாம். ட்ரை பண்ணி பாருங்க.
கறிவேப்பிலை-பெருங்காயச் சட்னி
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை- 100 கிராம்
பெருங்காயத் தூள் கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய் 2 டீஸ்பூன்
புளி ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
கறிவேப்பிலை இலைகளைக் கழுவி சுத்தம் செய்து, அதனுடன் துருவிய தேங்காய், பெருங்காயத்தூள், புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் போட்டு மசிய அரைத்து எடுது்தால் சுவையான கறிவேப்பிலை சட்னி ரெடி. இந்த சட்னியை சாதத்திற்கு அல்லது இட்லிக்கு தொட்டு சாப்பிடலாம்.