இந்தியாவில் ஒவ்வொரு வீ்ட்டின் சமையல் அறையிலும் பயன்படுத்தப்படும் முக்கிய சமையல் பொருட்களில் ஒன்று சீரகம். சமையலில் வாசனைக்கு பயன்படுத்தப்படும் இந்த சீரகம் ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. பித்த நோய், அஜீரணம். கண் எரிச்சல் கல்லடைப்பு, வாந்தி மயக்கம் உள்ளிட்ட பல்வேறு தொற்றுகளுக்கு சீரகம் சிறந்த தீர்வினை கொடுக்கிறது.
சீரகத்துடன் திப்பிலி தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிடும்போது விக்கம் நின்றுவிடும். உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும்போது சிறிதளவு சீரக தண்ணீரை குடிப்பது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும் அஜீரணம் குணமாகும்.
சாப்பிட்டபிறகு வயிறு உப்பசமாக இருப்பது போன்று உணர்ந்தால், சீரகம் ஏலக்காய் எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு சாப்பிடும்போது உப்பசம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அதேபோல் சீரகத்தூளை வெண்ணெயில் சேர்த்து சாப்பிடும்போது அல்சர் நோய் குணமாகும்.
கரும்புச்சாறு எலுமிச்சை சாறு இஞ்சி சாறு முசுமுசுக்கை சாறு ஆகியவற்றில் தனித்தனியாக சீரகத்தை சேர்த்து ஊறவைத்து மிக்சியில் நன்றாக அரைத்து சூரணமாக வைத்துக்கொள்ளலாம். இது பித்த தலைவலி உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வாக அமையும். மேலும் சீரகத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ, குடல் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil