தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட பலாப்பழம் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பிரியாணியாக இருந்தாலும், எளிமையான பழம் இருந்தாலும் அதன் சுவைக்காக மட்டுமல்ல, அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பலாப்பழம் பெரிய நன்மைகளை தருகிறது.
அசைவ உணவுக்கு சிறந்த மாற்று என்று கருதப்படும் பலாப்பழத்தில் உள்ள சில பண்புகள் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகின்றன.
பலாப்பழத்தில் ஊட்டச்சத்து நிரம்பியதா?
முற்றிலும். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் வைட்டமின்களின் வளமான மூலமாக உள்ள பலாப்பழம், இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. இதில் தாராளமாக வைட்டமின்கள் சி மற்றும் பி6 உள்ளது. இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்ற. இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பலாப்பழத்தை சாப்பிட வேண்டுமா?
பலாப்பழம் 100 இல் 50-60 நடுத்தர கிளைசெமிக் குறியீட்டை (GI) கொண்டுள்ளது. GI அளவுகோல் என்பது உணவு எவ்வளவு விரைவாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்கிறது என்பதற்கான குறிகாட்டியாகும். இதில் பலாப்பழம், குளுக்கோஸ் GI 100 ஐக் கொண்டுள்ளது மற்றும் உங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யலாம் என்று கூறுவார்கள்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பலாப்பழம் வைட்டமின்களின் சக்தியாக உள்ளது, ஆனால் நல்ல அளவில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. அதனால்தான் இது குறைந்த ஜிஐயைக் கொண்டுள்ளது, இது மெதுவாக செரிமானத்திற்கு தனது பங்களிப்பை தருகிறது. இதனால்இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
பலாப்பழத்தில் ஃபிளாவனாய்டுகளும் உள்ளன, அவை நீண்டகால நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. அவை லிக்னான்கள் எனப்படும் பைட்டோநியூட்ரியன்களின் களஞ்சியமாகவும், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஆன்டிஆக்ஸிடன்ட்களாகவும் உள்ளன.
பலாப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியாது என்றாலும், நீங்கள் முழு பழமாக சாப்பிடுகிறீர்கள் என்றால். அதன் அளவு மிதமானதாக இருக்க வேண்டும். இது குறித்து சிட்னி பல்கலைக்கழகத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் ஆராய்ச்சி சேவை நடத்திய ஆய்வில், பழுக்காத பலாப்பழத்தை உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும் என்பதை உறுதிப்படுத்தியது.
ஆய்வின்படி, சாதம் அல்லது இரண்டு கோதுமை சப்பாத்திகளுக்கு மாற்றாக 30 கிராம் நீரிழப்பு பழுக்காத பலாப்பழம் பயன்படுத்தப்பட்டது. இது மனநிறைவின் அதிகரித்த உணர்வுகளையும் வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது..
சர்க்கரை நோயாளிகள் பலாப்பழம் சாப்பிட சிறந்த வழி எது?
பல ஆய்வுகள் பலாப்பழ விதைகள் பழத்திற்கு ஒரு நல்ல மாற்றாக இருப்பதைக் காட்டுகின்றன, மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பச்சை பலாப்பழ மாவும் மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டுள்ளது. உங்கள் உணவில் இந்த மாவு சேர்த்துக்கொள்வது பிளாஸ்மா இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் என்பது பின்னர் தெரியவந்தது.
நீரிழிவு நோயை சமாளிக்க இது ஒரு சிறந்த வழி என்றாலும், இது உங்கள் மருந்துக்கு மாற்றாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நன்மை பயக்கும் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கும் அதே வேளையில், ஆட்டா, அரிசி அல்லது வேறு ஏதேனும் மாவுக்குப் பதிலாக பலாப்பழ மாவை மாற்ற முடிவு செய்வதற்கு முன், உங்கள் மருத்துவ பயிற்சியாளரை அணுகுவது முக்கியம்.
உயர் இரத்த சர்க்கரை அளவை சமாளிக்க பலாப்பழம் உங்கள் உணவில் ஒரு சிறந்த கூடுதலாக இருந்தாலும், அதை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியம். நிச்சயமாக, உங்களுக்கு கேள்விகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகுவதில் இருந்து தாமதிக்க வேண்டாம்.
அவர்கள் எப்போதும் சொல்வது போல், ஆரோக்கியம் செல்வம். எனவே, ஆரோக்கியமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள், இதனால் நீங்கள் நோய்களிலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“