/tamil-ie/media/media_files/uploads/2022/10/Lakhiyam.jpg)
இந்திய பாரம்பரியத்தின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இந்த நாளில் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசும் இனிப்பு காரம் போன்ற பலகாரங்களும்தான். பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தீபாவளிக்கு தேவையாக அனைத்து பொருட்கள், பலகாரங்கள் புதுத்துணிகள் உள்ளிட்டவற்றை வாங்கும் பணிகளில் மக்கள் ஈடுபடுவார்கள்.
அதேபோல் தீபாவளி தினத்தில் அதிகப்படியான பலகாரங்களை உண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். ஆனால் இந்த பலகாரங்கள் அவைருக்கும் சரியாக இருக்குமா என்றால் இல்லை என்று சொல்லாம். சிலருக்கு அதிகப்படியாக பலகாரங்கள் சாப்பிடுவதால் அஜீரணம், வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்த சமயத்தில் பொதுவாக அனைவருக்கும் பயன்படும் வகையில் தயாரிக்கப்படுவது தான் தீபாவள லேகியம். வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த லேகியம் உடனடி பலனை கொடுக்கும். இந்த லேகியத்தை எப்படி செய்வது என்று பார்ப்போமா?
தேவையா பொருட்கள் :
இஞ்சி – கால்கிலோ
வெல்லம் – அரைகப்
தேன் – கால்கப்
நெய் – ஒன்னரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள்பொடி – சிறிதளவு
மல்லிப்பொடி – 2 டீஸ்பூன்
சீரகப்பொடி – ஒரு டீஸ்பூன்
செய்முறை :
முதலில் இஞ்சியை நன்றாக கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். அடுத்து வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனை வடிகட்டி மீண்டும் காய்ச்சி எடுத்தக்கொள்ளவும்.
காய்ச்சிய வெல்லம் சற்று தடிமனாக வரும்போது அரைத்த இஞ்சியை அதில் சேர்த்து கிளறவும். நன்றாக கிளறிவிட்டு அதில் மஞ்சள் பொடி தனியா பொடி சீரகப்பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.
சுமார் 7 நிமிடங்கள் கொதித்தவுடன் வாணலில் ஒட்டாமல் தனியாக வரும். அப்போது நெய் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். நன்றாக ஆறிய பின் தேன் சேர்த்து கைப்படாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். வயிற்று பிரச்சினைகளை தீர்க்கும் இந்த ரெசிபி ஆரோக்கியமானது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.